மேட்டூர் அணை உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பும் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 


சேலம்,


 


மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரைக் கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை நிரப்பும் சரபங்கா திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.  நிழ்ச்சியில் பேசிய முதல்வர், தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.


 


இத்திட்டத்தினால் சரபங்கா வடிநில பகுதியில் வறட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றிற்கு மேட்டூர் அணை உபரிநீர் மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படும். இதனால் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும். 


 


இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி இன்னும் 11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப‌ப்படும் என்று கூறினார்.


 


குடிமராமத்து திட்டம் குறித்து ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார், குடிமராமத்து திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டது. திட்டங்களை அறிவித்துவிட்டு மக்களை ஏமாற்றும் அரசு இது அல்ல, எதிர்க்கட்சியினர் வாய்ச்சொல் வீரர்கள் ஆனால் நாங்கள் செயல் வீரர்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.


 


காவிரி - கோதாவரி திட்டம் நிவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்; ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களுடன் இணைந்து இத்திட்டம் நிறைவேற்றப்படும். எந்த நிகழ்ச்சியிலும் கிடைக்காத மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சரபங்கா திட்டம் ரூ. 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கதுஇந்தத்திட்டத்தினால் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு, இப்பகுதிமக்களின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது



சக்திபாரதி