ஊரடங்கை மீறியதாக மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்படும். 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். அந்தந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வாகனங்கள் வழங்கப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.
பறிமுதல் வாகனங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்!'